சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
Published on
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவரை விடுதலை செய்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு கர்ப்பமாக்கிய வழக்கில் திருவள்ளூரை சேர்ந்த விக்டர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செல்வம், கிருபாகரன், ராஜேந்திரன், பியூலா ஆகியோர் கைதாகியிருந்தனர். இந்த வழக்கை அப்போது விசாரித்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த காலத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயதுக்கு கீழ் இருந்தார் என்பதை காவல்துறை தரப்பு நிரூபிக்க தவறியதாகக் கூறி விக்டர் ஜான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக் கூறி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து விக்டர் ஜான் குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை சிறுமியின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com