திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த துயரம்... தூங்கிக்கொண்டிருந்த அண்ணனை கொன்ற தம்பி

திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த துயரம்... தூங்கிக்கொண்டிருந்த அண்ணனை கொன்ற தம்பி
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த துயரம்... தூங்கிக்கொண்டிருந்த அண்ணனை கொன்ற தம்பி

திருமணத்தை மீறிய உறவுக்காரணமாக ஏற்பட்ட விரோதத்தில் தூங்கி கொண்டிருந்த அண்ணனை அறிவாளால் வெட்டி கொன்ற தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை திம்பம்பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கமலா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் தனியே தனது வீட்டில் வசித்து வரும் நிலையில் ரங்கராஜ், தனது தம்பி குபேந்திரன் பழகி வரும் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணும், ஏற்கெனவே திருமணமானவர்.

இதனிடையே அந்தப் பெண் குபேந்திரனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு இவ்விவகாரம் தொடர்பாக அப்பெண் குபேரனைத் தேடி அவது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அவருடைய ரங்கராஜ் அந்தப் பெண்ணை வீட்டில் அமர வைத்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

அப்போது திடீரென அங்கு வந்த குபேந்திரன், ஆத்திரமடைந்து அந்தப் பெண்ணையும், அண்ணன் ரங்கராஜையும் திட்டியுள்ளார். இதனால் அப்பெண் அதன்பின் அங்கிருந்து வெளியே சென்ற நிலையில் அதன் பின் குபேந்திரனிற்கும் அண்ணன் ரங்கராஜூக்கும் நீண்ட நேரமாக சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கராஜை ஆத்திரத்தில் இருந்த குபேந்திரன் அறிவாளால் சராமாறியாக வெட்டி உள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே ரங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காரமடை போலீசார் ரங்கராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணனை வெட்டி கொன்ற தம்பி குபேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com