மனைவி, மைத்துனி, மாமியாரை கொலை செய்துவிட்டு கேவலமான செயல் செய்த நபர்!
ஹரியானாவில் நபர் ஒருவர் அவரது மனைவி, மைத்துனி, மாமியாரை கொலை செய்து அவர்களின் உடல்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியான மாநிலம் சோனாபெட் மாவட்டம் பட்டிகல்யாணி பகுதியைச் சேர்ந்தவர் நூர் ஹாசன்.(27). இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சமல்காவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் தனது மனைவி திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருப்பதாகவும் அதற்கு தனது மாமியார் உடந்தையாக இருப்பதாகவும் சந்தேகித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி தனது மனைவிக்கும் மைத்துனிக்கும் போதை மருந்து கொடுத்து கூர்மையான ஆயுதங்களை கொண்டு கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், செப்டம்பர் 8ஆம் தேதி புர்ஷாம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அவரது அடையாளத்தை மறைக்க அவர் உடலை எரிக்கவும் முயற்சி செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் செப்டம்பர் 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தபின்பு அவர்களின் உடல்களை குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 மற்றும் 201 ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.