பெங்களூரு: உயிரைப்பறித்த சந்தேகம்... காதலியின் பிறந்தநாளை கொண்டாடிய கையோடு காதலன் செய்த கொடூரம்!

காதலியின் நடத்தை மேல் சந்தேகம் கொண்டு, காதலனே அவரை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது
Accused Prasanth
Accused PrasanthTwitter

லொபெங்களூருவின் கனகப்புராவை சேர்ந்தவர் நவ்யா (26). இவர் பெங்களூரில் காவல்துறையின் உள் பாதுகாப்பு பிரிவில் (ISD) எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இவரும், இவரின் தூரத்து உறவினரான பிரசாந்த்தும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Love
LoveFreepik

இந்நிலையில் நவ்யாவுக்கு பல நண்பர்களும் இருந்துள்ளனர். இதில் சில ஆண் நண்பர்களும் இருந்துள்ளனர். நவ்யா அவர்களோடு நட்பாக பேசியும் சாட் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இது அவரது காதலரான பிரசாந்திற்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் நவ்யாவை அவர் கண்டித்துள்ளார். இது குறித்து இருவருக்கும் இடையே பலமுறை சண்டையும் வந்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 11 ம் தேதி நவ்யாவின் பிறந்த நாள் வந்திருக்கிறது. நவ்யா நேரமின்மை காரணமாக தனது பிறந்தநாளை நேற்று (14ம் தேதி) காதலர் பிரசாந்துடன் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்.

அதன்படி பிரசாந்தும், நவ்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கேக் ஆடர் செய்துள்ளார். கேக் கட் செய்வதற்காக, நவ்யாவை தன் இடத்திற்கும் அழைத்திருக்கிறார் பிரசாந்த். நவ்யாவும் மகிழ்ச்சியுடன் சென்றிருக்கிறார். அங்கு நவ்யா, பிரசாந்த் வாங்கி வைத்திருந்த கேக்-ஐ கட் செய்த நொடியில், பிரசாந்த் தான் மறைத்து வைத்திருந்த கூரான கத்தியால் நவ்யாவின் கழுத்தில் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.

Murder
MurderPixabay

நவ்யாவின் அலறல் சத்தம் கேட்டதும், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டுள்ளனர். தொடர்ந்து நவ்யாவை அவர்கள் அருகிலிருந்த விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோதும், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பிரசாந்தை கைது செய்த காவலர்கள், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கிருப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com