மகாரஷ்டிரா: நோயாளி மனைவியை பார்த்துக்கொள்ள முடியவில்லை என கொலை செய்த கணவர் கைது

மகாரஷ்டிரா: நோயாளி மனைவியை பார்த்துக்கொள்ள முடியவில்லை என கொலை செய்த கணவர் கைது
மகாரஷ்டிரா: நோயாளி மனைவியை பார்த்துக்கொள்ள முடியவில்லை என கொலை செய்த கணவர் கைது

மகாராஷ்டிராவில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மனைவியை கவனித்துக்கொள்ள முடியாததால் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பார்பானி மாவட்டத்திலுள்ள முத்கல் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது நபரின் மனைவிக்கு மூளையில் கட்டி வந்திருக்கிறது. அந்த நபருக்கு வேலை எதுவும் கிடைக்காததால் மனைவியின் மருத்துவச் செலவிற்கே வசதியில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். சனிக்கிழமை இரவு அந்த நபர் வீட்டிலிருந்த கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தனது மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.

பிறகு வீட்டைவிட்டு வெளியேவந்த அந்த நபர் ரத்தக்கறை படிந்த துணிகளை வீட்டிற்கு அருகில் தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறை தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார் அந்தத் துணிகளை கைப்பற்றிய பிறகு, ஞாயிற்றுக்கிழமை அந்த நபரை கைது செய்தனர்.

விசாரணையில், தனது மனைவிக்கு மருத்துவம் பார்த்து தான் சோர்ந்துவிட்டதாகவும், அதனால் கொலை செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதனால் அந்த நபர்மீது இந்திய சட்டப்பிரிவு 302இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதாரி காவல் நிலைய ஆய்வாளர் வசந்த் சாவன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com