சென்னை: ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றவர் மீது அதிவேகமாக மோதிய கார்; சம்பவ இடத்திலேயே பலி

சென்னை: ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றவர் மீது அதிவேகமாக மோதிய கார்; சம்பவ இடத்திலேயே பலி
சென்னை: ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றவர் மீது அதிவேகமாக மோதிய கார்; சம்பவ இடத்திலேயே பலி

தாம்பரம் அருகே ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றவர் மீது அதி வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணி(53). இவர் கூலி வேலை செய்துவருகிறார். இந்த நிலையில், மணி வேலைக்கு சென்றபோது தாம்பரம் நெஞ்சக அரசு மருத்துவமனை அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்றள்ளார். அப்போது அதி வேகமாக வந்த கார் மோதி மணி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் குரோம்பேட்டை போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்துசென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சேது(27) என்பவரை கைதுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com