போலீஸ் எனக்கூறி ரூ. 2 லட்சம் பணத்தை ஏமாற்றிய நபர் - போலீசாரிடம் சிக்கவைத்த பெண்

போலீஸ் எனக்கூறி ரூ. 2 லட்சம் பணத்தை ஏமாற்றிய நபர் - போலீசாரிடம் சிக்கவைத்த பெண்
போலீஸ் எனக்கூறி ரூ. 2 லட்சம் பணத்தை ஏமாற்றிய நபர் - போலீசாரிடம் சிக்கவைத்த பெண்

சென்னையில் பெண்ணை மிரட்டி 2 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்த போலி போலீசை மெரினா போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (35). திருமணமான இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நாகலட்சுமி மெரினா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் தனது சக ஊழியரான கிஷோர் என்பவருடன் விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள மணற்பரப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும், அப்போது அங்குவந்த நபர் ஒருவர் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு சக ஊழியரான கிஷோருடன் தான் நெருக்கமாக இருந்தவாறு புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாகவும், அதை பெற்றோரிடம் காட்டிவிடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது விவரங்கள், செல்போன் தொடர்பு எண் போன்றவற்றை வாங்கிக்கொண்ட அந்த நபர் அன்றிலிருந்து தொடர்ந்து தன்னை மிரட்டி தி.நகர் பேருந்து பணிமனை அருகே வரச்சொல்லி பணம் பறித்து வருவதாகவும், நேரிலும் கூகுல் பே மூலமாகவும் இதுவரை அந்த நபர் தன்னிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளதாகவும் நாகலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தொடர் மிரட்டல் விடுத்து தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மெரினா போலீசார் நாகலட்சுமியை வைத்து அந்த நபருக்கு செல்போனில் தொடர்புகொண்டு தி.நகர் பேருந்து பணிமனைக்கு பணம் தருவதாகக் கூறி வரவழைத்து கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் மணலி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (40) என்பதும், துறைமுக ஒப்பந்தப் பணியாளரான சதீஷ், நாகலட்சுமியிடம் போலீஸ் எனக்கூறி ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் சதீஷ்குமாரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com