திண்டுக்கல்: ஒரே பெண்ணை காதலித்த 2 நண்பர்கள்? - மதுபோதையில் ஒருவர் கொலை

திண்டுக்கல்: ஒரே பெண்ணை காதலித்த 2 நண்பர்கள்? - மதுபோதையில் ஒருவர் கொலை

திண்டுக்கல்: ஒரே பெண்ணை காதலித்த 2 நண்பர்கள்? - மதுபோதையில் ஒருவர் கொலை
Published on

திண்டுக்கல் அருகே மது போதையில் நண்பனை கொலை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது நண்பர் அஜித். இவர்கள் இருவரும் சாலையூரில் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இதனிடையே இரண்டு பேரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண்ணை மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத அஜித் நேற்று மணிகண்டன் மற்றும் மற்றொரு நண்பருடன் சேர்ந்து அருகே உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்தி உள்ளார். அப்போது போதை அதிகமான நிலையில் அஜித்தும் மற்றொரு நண்பரும் சேர்ந்து மணிகண்டனை மது அருந்திய பாட்டிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் ரத்தம் படிந்த கரையுடன் வந்த அஜித்தை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து வைத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மணிகண்டனை கொலை செய்ய பயன்படுத்திய உடைந்த மதுபாட்டில்களை கைப்பற்றியதோடு பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்ட அஜித்தை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com