ரவுடி சங்கர் என்கவுண்ட்டர்: விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்

ரவுடி சங்கர் என்கவுண்ட்டர்: விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்
ரவுடி சங்கர் என்கவுண்ட்டர்: விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்

சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் வழக்கில் விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்த சங்கர் என்ற ரவுடி, நியூ ஆவடி சாலை அருகே தஞ்சமடைந்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் ‌தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.

இதனையறிந்த சங்கர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். உடனே காவலர்கள் சங்கரை சுற்றிவளைத்தனர். அப்போது, அங்கிருந்த காவலர் முபாரக்கை, அரிவாளால் வெட்டிவிட்டு சங்கர் தப்பிக்க முயன்றார். இதனால் தற்காப்புக்காக, காவல் ஆய்வாளர் நடராஜன், ரவுடி சங்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில், காயமடைந்த சங்கர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட சங்கரின் உடல் கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த காவலர் முபாரக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். இதையடுத்து இந்த என்கவுண்ட்டர் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணன் ரவுடி சங்கர் என்கவுண்டர் தொடர்பான விசாரணையை நடத்த நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com