'புஷ்பா' பட பாணியில் செம்மரக்கட்டை திருடிய நபர் கைது

'புஷ்பா' பட பாணியில் செம்மரக்கட்டை திருடிய நபர் கைது

'புஷ்பா' பட பாணியில் செம்மரக்கட்டை திருடிய நபர் கைது

'புஷ்பா' பட பாணியில் செம்மரக்கட்டையை கடத்த முயன்ற  நபரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்தாண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்  நடிப்பில் வெளியான திரைப்படம் 'புஷ்பா'. இப்படம் பெரும் வெற்றி பெற்று வசூல் வாரிக் குவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் சந்தன மரத்தைக் கடத்துவார்.  இந்நிலையில் இதே பாணியில் 2.45 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டையை கடத்த முயன்ற யாசீன் இனாயத்துல்லா என்கிற நபரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

லாரியில் சிவப்பு சந்தனத்தை ஏற்றி, அதன் மேல் பழங்கள் மற்றும் காய்கறி பெட்டிகளை ஏற்றியுள்ளார். கர்நாடகா-ஆந்திரா எல்லையில் இருந்து மகாராஷ்டிராவுக்கு செல்லும்போது அந்நபர் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த நபரிடம் இருந்து செம்மரக்கட்டையை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: லோடுமேன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவர் கைது


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com