மதுரை: பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - சகோதரன் உட்பட இருவர் கைது
பள்ளி மாணவியை உடன் பிறந்த சகோதரனே பாலியல் வன்கொடுமை செய்த அவலம். சிறுமியின் சகோதரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் 13 வயது சிறுமி கர்ப்பமாக உள்ளதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கீதாதேவி தலைமையில் சிறுமியிடம் நேரடி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் பயிலும் தோழி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி, அடிக்கடி தோழி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது தோழியின் சகோதரர் சரவணன் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், அந்த சிறுமி கடந்த அக்டோபர் மாதம் தோழி வீட்டுக்குச் சென்றபோது தோழியின் அண்ணன் சரவணன், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் வீட்டிக்கு அடிக்கடி சென்ற சரவணன், சிறுமி தனியாக இருக்கும் போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனிடையே சரவணனுடன், சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொடர்பு இருப்பது சிறுமியின் சகோதரருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர், சகோதிரியான சிறுமியை. மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமிக்கு உடல்நலம் குன்றிய நிலையில், பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவர்கள் சிறுமியை பரிN;சாதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சரவணன் மற்றும் சிறுமியுடன் உடன்பிறந்த 14 வயது சகோதரர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை உடன் பிறந்த சகோதரனே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.