மதுரை: திருமணமான மூன்றே மாதத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிப் படுகொலை

மதுரை: திருமணமான மூன்றே மாதத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிப் படுகொலை
மதுரை: திருமணமான மூன்றே மாதத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிப் படுகொலை

மேலூர் அருகே திருமணமாகி மூன்றே மாதத்தில் புது மாப்பிள்ளை பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை. மேலூர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலூர் அருகே உள்ள பேப்பனையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரணன் என்பவரின் மகன் வெள்ளைச்சாமி. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் உறவுக்கார பெண்ணான பவானி எஎன்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை பூதமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வெள்ளைச்சாமியை வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியதில் நிகழ்விடத்திலேயே வெள்ளைச்சாமி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா தலைமையிலான காவல்துறையினர் இறந்த வெள்ளைச்சாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இக்கொலைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவுக்கார பெண்ணை மணம் முடிப்பதில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் முன்பகை காரணமாக மேலூர் பகுதிகளில் 2 படுகொலைகள் நடந்திருப்பது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com