காவலரை கத்தியால் குத்திய நபர் கைது
காவலரை கத்தியால் குத்திய நபர் கைதுpt desk

மதுரை: பேருந்திற்காக காத்திருந்த காவலரை கத்தியால் குத்திய நபர் கைது

மதுரையில் பேருந்திற்காக காத்திருந்த காவலரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: செ.சுபாஷ்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று இரவு சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரை வரை சென்றுள்ளார். மதுரையில் மண்டேலா நகர் சந்திப்பு பகுதியில் காரியாபட்டி பேருந்துகளுக்காக நின்று கொண்டிருந்தார்.

Police station
Police stationpt desk

அப்போது மதுரை சோளங்குரணி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரும் அப்பகுதிக்கு சென்றுள்ளார். மண்டேலா நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்-ல் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வரும்போது ஆறுமுகத்திற்கும், காவலர் ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆறுமுகம் தான் வைத்திருந்த கத்தியால் காவலரை குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த காவலர் ராஜ்குமார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பி உள்ளார்.

காவலரை கத்தியால் குத்திய நபர் கைது
ஆந்திர முதல்வர், துணை முதல்வர் குறித்து சர்ச்சைப் பதிவு... இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்கு!

இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com