’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!

’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!

காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மகனின் இறப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் முதன்மை உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ரங்கம்மாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''எனக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். எனது மகன் ஈஸ்வரனை தல்லாகுளம் காவல் துறையினர் பொய்யான புகாரின் பேரில் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து உள்ளனர். இதில் மனமுடைந்த எனது மகன் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

எனவே எனது மகன் இறப்பிற்கு காரணமான காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மேலும் எனது மகன் இறப்பிற்கு ரூபாய் 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எனது மகன் இறப்பிற்கு காரணமான காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், எனது மகன் இறப்பிற்கு காரணமான அதிகாரிகளிடமிருந்து இழப்பீடு தொகையாக ரூபாய் 25 லட்சம் பெற்று தர வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து தமிழகம் முதன்மை உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிக்கலாம்: சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com