மதுரை: சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைது

மதுரை: சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைது
மதுரை: சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைது

மதுரை அருகே +2 படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, 8 மாத கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளரான தங்கபாண்டி (27) வாலிபருக்கு திருமணமாகி 8 ஆண்டுகளான நிலையில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குழந்தை இல்லாத தங்கபாண்டி, தனக்கு திருமணமானதை மறைத்து பக்கத்து ஊரைச் சேர்ந்த +2 படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பழகி வந்துள்ளார். தங்கப்பாண்டி அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் பல்வேறு தனிமையான இடங்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். இதனால் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் 


சிறுமியின் உடலில் மாற்றத்தை கண்டறிந்த பெற்றோர் இதுவரையில் உடல் உபாதை என எண்ணி வந்துள்ளனர். தற்போது மிகுந்த சந்தேகம் ஏற்பட்டதன் அடிப்படையில் இது குறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித் போது நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபர் தங்கப்பாண்டியை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com