மதுரை: பெண் காவலரிடம் நகையை வழிப்பறி செய்த மர்ம நபர்கள்.. பரபரப்பு CCTV காட்சி வெளியீடு!

மதுரை: பெண் காவலரிடம் நகையை வழிப்பறி செய்த மர்ம நபர்கள்.. பரபரப்பு CCTV காட்சி வெளியீடு!
மதுரை: பெண் காவலரிடம் நகையை வழிப்பறி செய்த மர்ம நபர்கள்.. பரபரப்பு CCTV காட்சி வெளியீடு!

மதுரையில் காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்துசென்ற பெண் காவலரிடம் மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்ககூடிய வெள்ளியம்மாள் என்ற ஆயதப்படை பெண் காவலர் நேற்றிரவு 8மணி அளவில் பிபி குளம் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இரவு காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு தனது குழந்தையுடன் நடந்துவந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெண் காவலர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கலியை பறித்துச்செல்ல முயற்சி செய்துள்ளனர்.

அப்பொழுது அந்த பெண் சுதாரித்துக் கொண்டு செயினை பிடித்துக்கொண்ட நிலையில் நான்கரை பவுன் தங்க நகையை பறித்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்துச்சென்ற பெண் காவலரிடம் நகையை வழிப்பறி செய்த போது இரு சக்கர வாகனத்தை பெண் காவலர் விரட்டிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர் குடியிருப்பில் பெண் காவலரிடம் நகை பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com