மதராஸாவில் சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர் கைது!

மதராஸாவில் சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர் கைது!
மதராஸாவில் சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர் கைது!

சிறுவர்களை மிரட்டி மூன்று மாதமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மதராஸா ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஐதராபாத்தில் உள்ள ஆசிப் நகரில் மதராஸா ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை மாணவர்களுக்கு கட்டணம் இன்றி உருது, அராபிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இலவசமாக தங்குமிடமும் உணவும் வழங்கப்படுகிறது. இதில் சுமார் 25 மாணவர்கள் படிக்கின்றனர்.  தெலங்கானாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உத்தரபிரதேசத்தில் இருந்து சில மாணவர்களும் ஹாஸ்டலில் தங்கி படிக்கின்றனர். ஆறு வயதில் இருந்து பத்து வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். இதன் ஆசிரியராக பீகாரை சேர்ந்த முகமது ரேஹன் அன்சாரி கடந்த வருடம் சேர்ந்தார். இவரும் ஹாஸ்டலில் மாணவர்களுடன் தங்கியிருந்தார்.

இவர் சிறுவர்களை மிரட்டி, இயற்கைக்கு முரணான வகையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுக்கும் மாணவர்களை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதுபற்றி மாணவன் ஒருவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தான். இதையடுத்து அவர்கள் மதராஸாவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் விசாரித்தனர். பின்னர் போலீசில் புகார் செய்தனர். புகாரை அடுத்து போலீசார் ஆசிரியர் அன்சாரியை கைது செய்துள்ளனர். 

போலீசார் கூறும்போது, ‘ஆறு மாணவர்களுக்கு அன்சாரி இதுபோன்று தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பல மாணவர்கள் பயந்து வெளியில் சொல்லவில்லை. கடந்த மூன்றுமாதமாக இந்த செய்கையில் அவர் ஈடுபட்டுள்ளார். அவரிடம் இன்னும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com