'சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்துகொண்டு எஸ்.வி.சேகர் இப்படி செய்யலாமா?”- நீதிமன்றம்

'சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்துகொண்டு எஸ்.வி.சேகர் இப்படி செய்யலாமா?”- நீதிமன்றம்
'சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்துகொண்டு எஸ்.வி.சேகர் இப்படி செய்யலாமா?”- நீதிமன்றம்

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அருவறுக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி.சேகரின் வாடிக்கை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது, ஆளுநர் மாளிகையில் பெண் பத்திரிகையாளர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவிய தகவலை பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் ட்விட்டரில் மறுபதிவு செய்திருந்தார். அது சர்ச்சைக்குள்ளானது. பலரும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, `பெண் நிருபர்களை பேசிய விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக்கோருகின்றேன்’ என எஸ்.வி.சேகர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்மீதான ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக பிரமான பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்ற தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் அளித்திருந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், “கடந்த 2020ஆம் ஆண்டில் நடிகர் எஸ்.வி. சேகர் சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்ட பதிவுகளை அவர் ரீடிவீட் செய்தார். பின் அதனை நீக்கியுள்ளார்” எனக் கூறி அதற்கான பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதி, “மற்ற பதிவுகளை அவர் படிக்காமல் பகிர்ந்ததை ஏற்று கொள்ளலாம், ஆனால் இதுபோன்று மறுபதிவு செய்ததை ஏற்று கொள்ள முடியாது. சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்து கொண்டு இதுபோன்ற செயலை செய்வது ஏற்று கொள்ள முடியாது” என அதிருப்தி தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எஸ் வி.சேகர் விளக்கமளிக்க உத்தரவிட்டுவழக்கு விசாரணை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com