செல்போன் அழைப்பை ஏற்காத காதலன்: மனமுடைந்த காதலி தற்கொலை முயற்சி

செல்போன் அழைப்பை ஏற்காத காதலன்: மனமுடைந்த காதலி தற்கொலை முயற்சி
செல்போன் அழைப்பை ஏற்காத காதலன்: மனமுடைந்த காதலி தற்கொலை முயற்சி

காதலன் நீண்ட நேரம் தனது செல்போன் அழைப்பை ஏற்காததால் விரக்தியடைந்த பெண் மண்ணெண்ணெயை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்போது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் ராஜாஜி நகரில் பெற்றோருடன் வசித்து வருபவர் தீபா. வயது 22. வாடகை வீட்டில்தான் குடியிருந்து வருகிறார். 8-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துள்ள தீபா அதன்பின் தொடர்ந்து படிக்கவில்லை. வேலைக்கும் செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்திருக்கிறார். இதனிடையே தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகனுக்கும் தீபாவுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இவர்களின் காதல் தொடர்ச்சியாக நல்ல முறையில் சென்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தீபாவை அந்த இளைஞர் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபா தன் காதலருக்கு நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் தீபாவின் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் விரக்தியடைந்த தீபா மீண்டும் மீண்டும் தனது காதலருக்கு போன் செய்திருக்கிறார். ஆனால் எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்படவே இல்லை. ஒரு கட்டத்தில் நிதானத்தை இழந்து தன் காதலர் தன்னை அதிகம் நிராகரிப்பதுபோல் உணர்ந்திருக்கிறார் தீபா. பின்னர் விரக்தியடைந்து வீட்டின் சமையலுக்காக வைக்கப்பட்ட மண்ணெண்ணெயை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வீட்டில் இருந்தவர்கள் தீபாவை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சேலையூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்: S. சாந்தகுமார்.  செய்தியாளர், புதிய தலைமுறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com