பாலியல் வன்கொடுமை வழக்கில் வாழ்நாள் சிறை - புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் வாழ்நாள் சிறை - புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் வாழ்நாள் சிறை - புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை அருகே இரண்டாவது மனைவியின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தொடர்புடைய நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்ஜத்கான் (44). இவர், கடந்த மார்ச் மாதம் தனது இரண்டாவது மனைவியின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி குழந்தை பிறக்க காரணமாக இருந்ததாக அம்ஜத்கான் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கியும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கெனவே அரசு சார்பில் 3.50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிய நிலையில், மேலும் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து குற்றவாளி அம்ஜத்கான் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். புகார் கொடுக்கப்பட்ட 8 மாத காலத்திற்குள் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com