நில மோசடி வழக்கு: ரியல் எஸ்டேட் அதிபருக்கு சாதகமாக செயல்பட்ட 5 அரசு அதிகாரிகள் கைது

நில மோசடி வழக்கு: ரியல் எஸ்டேட் அதிபருக்கு சாதகமாக செயல்பட்ட 5 அரசு அதிகாரிகள் கைது
நில மோசடி வழக்கு: ரியல் எஸ்டேட் அதிபருக்கு சாதகமாக செயல்பட்ட 5 அரசு அதிகாரிகள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வடகால் ஏ,பி மற்றும் பால் நல்லூர் கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டது.

விஜிபி நிறுவனத்தின் சார்பாக அதன் பங்குதாரர் ராஜதாஸ் என்பவர் மேற்படி மனை பிரிவுகளுக்கு பொது உபயோகத்திற்காக சுமார் 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து பொது பயன்பாட்டிற்கு வழங்கினார்.

இந்நிலையில் அந்த நிலங்களை விஜிபி அமலதாஸ் ராஜேஷ் என்பவர் மோசடி செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.

பொது உபயோகத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தை ரத்து செய்து அதற்கு உடந்தையாக செயல்பட்ட இந்து சமய அறநிலையத்துறை. சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் ராஜதுரை, ,காஞ்சிபுரம் நில எடுப்பு பிரிவு வட்டாட்சியர் எழில் வளவன், ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் பார்த்தசாரதி மற்றும் உதவியாளர் பெனடின் ஆகியோர் மீது காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள் இதுபோல் அரசு நிலத்தை மோசடி செய்த செயல் அதிர்ச்சி அளிக்கிறது. மோசடி செய்த நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி என கூறப்படுகிறது.

அரசு நிலத்தை மோசடி செய்த வழக்கில் அமலதாஸ் ராஜேஷ் கைது செய்யப்பட்டதும், அதற்கு உதவியாக இருந்த இரு சார்பதிவாளர்களான சுரேஷ் , ரவி ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com