ஜூஸில் நஞ்சு கலந்து காதலனை கொன்ற இளம்பெண்ணுக்கு பிணைவழங்கிய நீதிமன்றம்!

கேரளாவில் பழரசத்தில் நஞ்சு கலந்து கொடுத்து காதலனைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்ட இளம்பெண் கிரீஷ்மாவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் பிணைவழங்கியுள்ளது. 
நஞ்சு கொடுத்து காதலனை
கொன்ற இளம்பெண்
நஞ்சு கொடுத்து காதலனை கொன்ற இளம்பெண்முகநூல்

பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்தாண்டு அக்டோபரில் கிரீஷ்மா கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு பிணைவழங்கி உத்தரவிட்டுள்ளது. 

கன்னியாகுமரியை ஒட்டிய கேரளப் பகுதியில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த இளைஞரான ஷரோன் ராஜ், கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

ஷரோன் ராஜ், கிரீஷ்மா
ஷரோன் ராஜ், கிரீஷ்மா முகநூல்

இந்நிலையில் ஷாரோன் ராஜ் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான புகாரில் போலீசார் நடத்திய விசாரணையில், கிரீஷ்மாவே திட்டமிட்டு தனது காதலன் ஷரோன் ராஜா கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் வீட்டில் பார்த்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளவும், முதல் கணவர் இறந்து விடுவார் என ஜோதிடர் கூறியதாலும் பழரசத்தில் நஞ்சு கலந்து கொடுத்துள்ளார் என்பதும் அம்பலமானது.

நஞ்சு கொடுத்து காதலனை
கொன்ற இளம்பெண்
ஜாதகத்தை நம்பி காதலனை கொன்ற காதலி! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

இதையடுத்து கிரீஷ்மா, அவரது தாய், மாமா ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com