கேரளா: பள்ளி சென்று வீடு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

கேரளா: பள்ளி சென்று வீடு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
கேரளா: பள்ளி சென்று வீடு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

கேரளாவில் நேற்று முன்தினம் 12-ஆம் வகுப்பு மாணவியை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில்  விசாரணை நடந்த நிலையில், அந்த மாணவி வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரது 17 வயது மகள் ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து கிளம்பிய மாணவி, வீடு வந்து சேராத நிலையில் மாணவியின் பெற்றோர் இடுக்கி வெள்ளத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்த பின்பு மாணவியின் உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் மாணவியை தேடிவந்த நிலையில் மாணவி வீட்டின் அருகில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் உள்ள முட்புதரில் நெஞ்சில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.


இந்த நிலையில் அங்கு நடத்திய சோதனையில் ஒரு மொபைல் போன் அதன் பேட்டரியை கழட்டி மாற்றிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த போன் யாருடையது என்பது குறித்து விசாரித்தபோது மாணவியின் உறவினரான அருண் என்பவருடையது என தெரியவந்தது. அதன்பிறகு அருணை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியுடன் அருண் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து அருணை எங்கு தேடியும் இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது மாணவியை அருண் கொலை செய்து விட்டு தமிழகத்துக்கு தப்பி சென்றிருக்கலாம் அல்லது இந்த கொலைக்கு பிறகு அருண் தற்கொலை செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். உடனடியாக இந்த கொலையாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே மாணவியின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களின் கோரிக்கை ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com