கரூர்: இளைஞரால் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை

கரூர்: இளைஞரால் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை
கரூர்: இளைஞரால் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை

குளித்தலை அருகே 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பழைய ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் என்ற அறிவானந்தம் (28) மனைவியை பிரிந்து வாழும் இவர். எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுவனுக்கு ஆனந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவனின் தாய், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசியிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com