கரூர்: ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் 58 சவரன் தங்கம், ஒரு கிலோ வெள்ளி திருட்டு

கரூர்: ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் 58 சவரன் தங்கம், ஒரு கிலோ வெள்ளி திருட்டு
கரூர்: ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் 58 சவரன் தங்கம், ஒரு கிலோ வெள்ளி திருட்டு

கரூரில் ஹோட்டல் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 58 சவரன் தங்க நகைகளையும், ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் அருகே புலியூர் ஏ.பி. நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அந்த பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.  இன்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, மகன் மற்றும் மகளுடன் ஓட்டலுக்கு சென்றார். மாலையில் கணேசன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கே படுக்கை அறையில் இருந்த  பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகைகளும்ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளை நடந்த வீட்டில் குற்றவாளிகளின் விரல் ரேகை பதிந்துள்ளதா  என விரல் ரேகை பிரிவு போலீசாரும் சோதனையிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com