தொழில்செய்ய பணம் தரவில்லை: தந்தையை கடத்தி கொலைசெய்த மகன் !

தொழில்செய்ய பணம் தரவில்லை: தந்தையை கடத்தி கொலைசெய்த மகன் !
தொழில்செய்ய பணம் தரவில்லை: தந்தையை கடத்தி கொலைசெய்த மகன் !

தொழில் செய்வதற்கு பணம்தராத காரணத்தால் நண்பர்கள் உதவியுடன் சொந்த மகனே தந்தையை கடத்தி கொலைசெய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கர்நாடகாவின் எம்.வி நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான 52 வயது பன்னீர்செல்வம். இவர் வெள்ளிக்கிழமை காலை கோவிலுக்குச் செல்வதற்காக வீட்டைவிட்டு சென்றபின்னர் அவர் காணாமல் போனார். அன்று மாலையில், அவரது மனைவி போலீஸை அணுகி புகார் அளித்தார். அதன்பிறகு காவல்துறை விசாரித்தபோது மூத்த மகனின் ராஜேஷ் குமார் மீது காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது. "நாங்கள் வெள்ளிக்கிழமை மாலை ராஜேஷிடம் விசாரித்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்” என்று துணை போலீஸ் கமிஷனர் எஸ்.டி.சரனப்பா தெரிவித்தார். மேலும் ராஜேஷ் தனது தந்தையை கொலைசெய்ய கூட்டாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியதாக தெரியவந்துள்ளது.

பன்னீர் செல்வத்தை கோயிலுக்கு செல்லும் வழியில் கடத்திய ராஜேஷ் தலைமையிலான கும்பல், அவருக்கு விஷம் செலுத்தி கொலை செய்தனர். பிறகு புறநகரிலுள்ள வேம்கல் கிராமத்தின் காட்டுப்பகுதியில் அவரது உடலை வீசினார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதற்காக ராஜேஷ், அவர் தந்தையிடமிருந்து நிதிஉதவி கேட்டிருந்தார். ஆனால் அவர் உதவிசெய்ய மறுத்துவிட்டார். மேலும் தனது தந்தைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதன் காரணமாகவே கொலை செய்தேன் என்றும் சொன்னார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com