கன்னியாகுமரி: தனியார் வங்கி ஊழியரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்ததாக 3 பேர் கைது

கன்னியாகுமரி: தனியார் வங்கி ஊழியரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்ததாக 3 பேர் கைது
கன்னியாகுமரி: தனியார் வங்கி ஊழியரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்ததாக 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தனியார் வங்கி ஊழியரிடம் 10 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த மூன்று பேர் சிக்கினர்.

கேரளாவில் வங்கியில் தணிக்கையாளராக பணிபுரியும் பிரவீஷ் என்பவர் தனது சொந்த ஊரான தக்கலை பகுதியில் நிலம் வாங்க 10 லட்சம் ரூபாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது ஆழ்வார் கோவில் அருகே சொகுசு காரில் வந்து அவரை வழிமறித்த 3 பேர் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த பிராங்கிளின் ஜோஸ், விஜயகுமார், மாகீன் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com