கன்னியாகுமரி: புறா பறக்கவிடுவதில் ஏற்பட்ட முன்பகை - காவலர் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி: புறா பறக்கவிடுவதில் ஏற்பட்ட முன்பகை - காவலர் வெட்டிக் கொலை
கன்னியாகுமரி: புறா பறக்கவிடுவதில் ஏற்பட்ட முன்பகை - காவலர் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புறா பறக்க விடுவதில் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  தப்பியோடிய குற்றவாளியை  போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (38). இவர், மணிமுத்தாறு 12-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடமாக இவர், பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்து வந்தார். இந்நிலையில் தான் வளர்க்கும் புறாவை பறக்கவிடுவது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் போலீஸ்காரர் சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சரவணனை அவரது உறவினர்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டார் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு மனைவியும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். தப்பியோடிய கொலையாளி ரமேஷை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com