இதுகுறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பேராசிரியரின் டைரியையும் கைப்பற்றினர். அதில், தனது குடும்பத்தினரை கொலை செய்தது குறித்தும், ஒமைக்ரானை பற்றியும் அவர் எழுதியுள்ளார். 'இப்போது, இறந்த உடல்களை எண்ணுவது தேவையில்லை' என்றும், கொரோனா வைரஸ் அனைவரையும் கொல்லும்' என்றும் அவர் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இதற்கு முன்பும் சுஷில் தன் மனைவியைக் கொலை செய்ய முயன்றிருப்பதாக அவரின் சகோதரர் தெரிவித்திருக்கிறார்.