கள்ளக்குறிச்சி: வாகன சோதனையில் சிக்கிய 65 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது

கள்ளக்குறிச்சி: வாகன சோதனையில் சிக்கிய 65 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது
கள்ளக்குறிச்சி: வாகன சோதனையில் சிக்கிய 65 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது
Published on

கள்ளக்குறிச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 65 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நைனார்பாளையம் அருகில் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 11 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக காரை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம் கூளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரையும் உடன் வந்த தண்டபாணி என்பவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிகடைகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com