ஜார்கண்ட்: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை தீ வைத்து எரித்த குற்றவாளி கைது.!

ஜார்கண்ட்: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை தீ வைத்து எரித்த குற்றவாளி கைது.!
ஜார்கண்ட்: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை தீ வைத்து எரித்த குற்றவாளி கைது.!

ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை தீ வைத்து எரித்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பல குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது தும்கா மாவட்டத்தில் பெண்ணை தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து அந்த பெண் எரிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பின்னர் குற்றவாளியை கண்டுப்பிடித்து கைது செய்துள்ளனர் தும்கா மாவட்ட காவல்துறையினர்.

சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "தும்காவில் ஒரு பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் அவர் ராஞ்சிக்கு அனுப்பப்பட்டார். குற்றவாளியான இளைஞன் அந்தப் பெண்ணுக்குத் தெரிந்த நபர். அவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் எரிக்கப்பட்ட பெண்ணை மணக்க விரும்பியுள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர் அதற்குத் தயாராக இல்லை. இந்நிலையில் தான் தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னர் 19 வயது சிறுமி ஒருவரின் லவ் புரபோசலை நிராகரித்ததற்காக தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் இன்னும் மறைவதற்குள், சில மாதங்களுக்கிடையே தும்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தும்கா மாவட்டத்தில் பாதி எரிந்த நிலையில் மற்றொரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com