சென்னை: துணை நடிகையின் வீடுபுகுந்து கத்தியை காட்டி நகை, பணம் பறிப்பு

சென்னை: துணை நடிகையின் வீடுபுகுந்து கத்தியை காட்டி நகை, பணம் பறிப்பு
சென்னை: துணை நடிகையின் வீடுபுகுந்து கத்தியை காட்டி நகை, பணம் பறிப்பு

வளசரவாக்கத்தில் வீட்டிற்குள் புகுந்து துணை நடிகையிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் பறிக்கப்பட்டுள்ளது. 

வளசரவாக்கம், ஏ.கே.ஆர்., நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(35). துணை நடிகையான இவர் மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்துள்ளார். அப்போது வெளியே நின்றிருந்த இரண்டு மர்ம நபர்கள் விஜயலட்சுமியிடம் கத்தி காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 10 கிராம் நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இரவு நேர ரோந்து பணியில் இருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் துணை நடிகையின் ஆடைகளை கலைந்து வீடியோ எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com