காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூர கொலை: தொடர் பாலியல் வன்கொடுமை !

காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூர கொலை: தொடர் பாலியல் வன்கொடுமை !
காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூர கொலை: தொடர் பாலியல் வன்கொடுமை !

காஷ்மீரில் 8வயது சிறுமியை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜம்மூ காஷ்மீர் மாநிலம் ரசானா கிராமத்தைச் சேர்ந்தவர் மொஹத் யூசப். இவருக்கு 8வயதில் ஒரு மகள் உள்ளார். யூசஃப் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி ஹீரா நகர் காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் ஜனவரி 10ஆம் தேதி நண்பகல் 12.30 மணியளவில் குதிரைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற தனது மகளை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் உள்ளூர் காவல்துறையினரால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி காணாமல் போன 7 நாட்களுக்கு பிறகு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.இதற்கு பின்பு தான் இவ்விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.

சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளியிடம் ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற காவல்துறையினர். இந்த வழக்கை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர்களின் போராட்டம் காரணமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதன்பின்னர் இந்த வழக்கு ஜம்மூ காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்த விவரங்களை சேகரித்தது. இவ்விவகாரம் தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் காவல்துறையினர், குற்றத்தை மறைக்க முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிறாரும் ஈடுபட்டுள்ளார். 8பேர் மீது காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சிறுமியை தூக்கிச்சென்று அடைத்து வைத்து தொடர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூரத்தை ஒரு கோவிலில் வைத்து அரங்கேற்றியுள்ளனர். இதன் பின்னர் அந்த சிறுமியை கொலை செய்துள்ளனர். 

இதற்கிடையில் காவல்துறையினரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஒருவழியாக இந்தவழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள 18பக்க குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது. 8வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்வதே கொடூரமான செயல். இந்த விவகாரத்தில் ராம் என்பவர் தான் மூளையாக செயல்பட்டுள்ளார்.

குற்றப்பத்திரிகை விவரங்கள்

ஜனவரி 10: 

சிறுமி தனது குதிரைகளுடன் காட்டுப்பகுதியில் இருந்துள்ளார்.அப்போது அங்கு சென்ற சிறார் அவளது கழுத்தில் கைகளால் இறுக்கி தனது கையால் அவளது வாயை பொத்தி தரையில் கிடத்தியுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ராம் வகுத்து தந்த திட்டத்தை இந்த சிறார் செயல்படுத்தியுள்ளார். அதன்பின்னர் மன்னு என்பவர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனையடுத்து சிறுமியை அங்கிருந்த கோவிலுக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

ஜனவரி 11:
சிறுமியின் பெற்றோர் அந்த கோவிலுக்கு சென்று சிறுமி குறித்து விசாரித்துள்ளார்.அதற்கு ராம், சிறுமி உறவினர்கள் இல்லத்துக்கு சென்றிருப்பாள் என கூறியுள்ளார். ஆனால் சிறுமியை ராம் அந்த கோயிலின் பிரார்த்தனை கூடத்தில் அடைத்து வைத்துள்ளான். சிறுமிக்கு மயக்க மாத்திரை கொடுத்து அடைத்து வைத்துள்ளனர். இதனையடுத்து அன்றைய தினம் சிறார் டெலிபோனில் தனது நண்பரான விஷால் என்பவரை தொடர்புகொண்டு சிறுமியை கடத்தி வந்த விஷயத்தையும் கூறியுள்ளான். நீயும் வந்து உனது ஆசையை தீர்த்துக்கொள் என தெரிவித்துள்ளான்.

ஜனவரி 12: விஷால் காலை 6மணியளவில் அங்கு விரைந்துள்ளான். அன்றைய தினம் மேலும் இரண்டு மயக்க மாத்திரையை கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை காணவில்லை என அவளது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள இரண்டு காவல் அதிகாரிகள் அந்த கோவிலுக்கு வந்தனர்.ராமிடம் விசாரணை மேற்கொண்டனர்.ஆனால் ராம் ரூ1.50லட்சம் லஞ்சமாக கொடுத்து காவல்துறை அதிகாரிகளை சரிகட்டிவிட்டான்.

ஜனவரி 13:
விஷால் ஜங்கோட்ரா, சிறார், ராம் மூவரும் பூஜைகள் செய்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளனர்.அதன்பின் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமியை இதற்கு மேல் வைத்திருக்க வேண்டாம் கொலை செய்து விடலாம் என ராம் தெரிவித்துள்ளான். இதனையடுத்து கோவில் அருகில் உள்ள பாலத்திற்கு கொண்டு சென்று கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து காஜுரியா,மன்னு, விஷால் மற்றும் அந்த சிறார் சிறுமியை கொலை செய்ய பாலம் இருந்த பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.அப்போது காஜூரியா என்பவன் கொலை செய்வதற்கு முன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துகொள்கிறேன் என கூறியுள்ளான். இதனையடுத்து சிறுமியை மேலும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.இதன்பின்னர் கொலை திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

காஜூரியா என்பவன் சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்துள்ளான்.இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது.அதன்பின்னர் கற்களை சிறுமியின் தலையில் இரண்டு முறை போட்டு கொலை செய்துள்ளனர்.அதன் பின்னர் சடலத்தை கோயிலின் பூஜை அறையில் வைத்துள்ளனர். சடலத்தை இடம்மாற்ற அவர்களிடம் போதிய வாகனம் இல்லை.இதனையடுத்து மற்றொரு நபரை ராம் அணுகியுள்ளான்.அதன்பின்னர் சிறுமியின் உடலை காட்டுப்பகுதியில் வீசியுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com