"மன்னித்துவிடுங்கள்; எனக்கு பசி’’ - மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த திருடன்.!

"மன்னித்துவிடுங்கள்; எனக்கு பசி’’ - மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த திருடன்.!
"மன்னித்துவிடுங்கள்; எனக்கு பசி’’ - மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த திருடன்.!

உசிலம்பட்டி சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பிறகு ” எனக்கு பசிக்கிறது, மன்னித்துவிடுங்கள். உங்களின் ஒரு நாள் வருவாய், என் 3மாத வருவாய்க்கு சமம்” என கடிதம் எழுதிவைத்துள்ளார்.

மதுரை அருகே உசிலம்பட்டியில் உள்ள ராம்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 65,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 5,000 ஆயிரம் பணத்தை திருடிய பின்னர், அந்த திருடன் கடை உரிமையாளருக்கு மன்னிப்புக் குறிப்பு எழுதி வைத்திருந்தார்.  

அந்த கடிதத்தில் "மன்னித்துவிடுங்கள். எனக்கு பசிக்கிறது. நீங்கள் ஒரு நாள் வருவாயை மட்டுமே இழந்தீர்கள், ஆனால் இது எனது மூன்று மாத வருவாய்க்கு சமம். மீண்டும் எனது மன்னிப்பு" என்று அந்த திருடன் எழுதியுள்ளார். திருடிய பிறகு சி.சி.டி.வி காட்சிகள் பதிவையும் திருடன் எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com