சமீபகாலமாக கடைகளில் வாங்கி உண்ணும் திண்பண்டம் மற்றும் குளிர்பானங்களால் சிலர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறக்கும் நிலை நிலவி வருகிறது. இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புக்கு முக்கியமான காரணமாக, உணவு பொருட்களில் செய்யப்படும் கலப்படமே சொல்லப்படுகிறது. இதுகுறித்த அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் சூழலில், சென்னை திருவள்ளூரில் சில கடைகளில் சிறுவர்கள் உண்ணும் கேக்கில் இரண்டு போதை மாத்திரைகள் இருப்பதாகவும், இதனை உட்கொண்டால் குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படுவதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.