ஐபிஎல் போட்டி: சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

ஐபிஎல் போட்டி: சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
ஐபிஎல் போட்டி: சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

ஐபில் கிரிக்கெட் தொடர்பான சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை மத்தியப்பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை-கொல்கத்தா மற்றும் பெங்களூரு-மும்பை அணிகள் இடையே போட்டிகள் நடைபெற்றன. விறுவிறுப்பாக போட்டிகள் நடந்த நிலையில் அதனை பயன்படுத்தி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் சூதாட்டமும் நடைபெற்றுள்ளது.

அங்குள்ள கட்டடம் ஒன்றில் அதிரடியாக சோதனை நடத்திய காவல்துறையினர், சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 செல்போன்கள், மடிக்கணினி மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தொலைதொடர்பு கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com