சத்தீஸ்கரில் ரயில் பயணி ஒருவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்து, மூன்றரை கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.
கொல்கத்தாவிலிருந்து நாக்பூர் செல்லும் ரயிலில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பயணி ஒருவர் தனது ஆடைக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.