இதனைத்தொடர்ந்து , காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது 5 பேரும் திருவள்ளூர் மற்றும் ஆவடி பகுதிகளில் நகை கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்றி நகை வாங்கியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கமலேஷ், அனிதா, நிர்மல் குமார், மாலதி, சோனி ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.