கொலை, கொள்ளை, போன்ற வன்முறைகளைப் போல், நரபலி, பில்லி சூனியம், மாந்திரீகம் என்ற பெயரில் மோசடிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. "உங்களுக்கு, உறவினர்களே பில்லி சூனியம் வைத்து விட்டார்கள்" என்று பீதியை கிளப்பி, அவற்றை எடுத்து விடுகிறோம் என்று நம்பிக்கையை ஏற்படுத்தி, பணம், நகைகளை பறிக்கும் சம்பவங்கள் அதிகமாகிவிட்டன. அப்படி ஒரு சம்பவம் சென்னையில் தற்போது நடந்துள்ளது.