வரதட்சணை கொடுக்காத மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்!

வரதட்சணை கொடுக்காத மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்!
வரதட்சணை கொடுக்காத மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்!

வரதட்சணை கொடுக்காததால் ஃபேஸ்புக்கில் மனைவியின் ஆபாச புகைப்படத்தை கணவர் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் விஜயபாரதி(32). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி பிரிந்து வாழ்ந்து வந்த அயனாவரத்தை சேர்ந்த திவ்யா(பெயர்மாற்றம்) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்று அயனாவரத்தில் வீடு வாடகை எடுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 10 லட்சம் வரதட்சணையாக கொடுக்கும்படி விஜயபாரதி நீண்ட நாட்களாக திவ்யாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுமட்டுமில்லாமல் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் திவ்யாவை மிரட்டி வந்துள்ளார்.


இதனால் கோபமடைந்த திவ்யா கடந்த ஜூலை மாதம் வில்லிவாக்கத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் விஜயபாரதி வரதட்சணை கொடுமை செய்வதாகவும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜயபாரதியை விசாரணைக்கு அழைத்த போது விழுப்புரத்தில் உள்ளதாகவும் இபாஸ் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் விஜயபாரதி தனது மனைவி திவ்யாவின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திவ்யா வீட்டில் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக திவ்யாவின் உறவினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com