மனைவியைக் கொன்றுவிட்டு மகளுக்கு போன் போட்ட தந்தை!

மனைவியைக் கொன்றுவிட்டு மகளுக்கு போன் போட்ட தந்தை!
மனைவியைக் கொன்றுவிட்டு மகளுக்கு போன் போட்ட தந்தை!

சென்னையில் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்றக் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வடசென்னை, வியாசர்பாடி எஸ்ஐகாலனி பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஜாபர்(60). இவர் ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி முபாரக் (52). மகன் வெளிநாடு சென்றுவிட்டதால், இந்தத் தம்பதியினர் தங்கள் மகள் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக, இன்று அதிகாலை தனது மனைவியின் தலையில் கல்லை போட்டு முகமது ஜாபர் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பின்னர் தனது மகளுக்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டு நடந்ததைக் கூறியுள்ளார். தகவல் அறிந்ததும் ஓடி வந்து பார்த்த மகள், தாய் இறந்த நிலையில் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் வருவதற்கு தந்தை அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த எம்கேபி நகர் காவல்துறையினர், இறந்த முபாரக் உடலை மீட்டு, ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஜாபரை தேடியுள்ளனர். தேடுதலின் போது அவர் கொருக்குப்பேட்டையில் இருப்பது தெரியவர, அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரனையில்,  ஜாபர் தொடர்ந்து குடித்து விட்டு தனது மனைவியுடன் சண்டைப் போட்டு வந்ததும், அதனை மனைவி கண்டித்ததும் தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக, மனைவியை அவர் கொலை செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com