பையனூரில் வசிக்கும் ரவிக்குமார், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து நாள்தோறும் மதுபோதையில் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டப்போது வீட்டில் இருந்த கிரிக்கெட் ஸ்டம்பால் மனைவியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் பாம்பு கடித்ததால் தனது மனைவி உயிரிழந்ததாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளார்.