பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் - சென்னை கமிஷனர் உத்தரவு

பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் - சென்னை கமிஷனர் உத்தரவு
பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் - சென்னை கமிஷனர் உத்தரவு

பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

இரு குழுக்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை கைது செய்தது.

கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இஸ்லாம் மதம் குறித்து அவதூறு பரப்பியதாக கடந்த ஜனவரி மாதம் கைதான கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுகுறித்த விசாரணையில் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், தற்போது அவர்மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com