\
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Published on

துபாயில் இருந்து வந்த 3 பேரிடம் திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து சிலர் தங்கம் கடத்தி வருவதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து துபாயில் இருந்து விமானத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான 3 பேரை பிடித்து திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com