ரயிலில் கடத்த முயன்ற ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ரயிலில் கடத்த முயன்ற ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ரயிலில் கடத்த முயன்ற ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Published on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் கோட்டையத்திற்கு ரயில் கடத்த முயன்ற 2.5 கிலோ தங்கம் சிக்கியது.

கேரள மாநிலம் பாறைசாலை ரயில்வே காவல் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் தங்கம் சிக்கியது. தங்கத்தை கடத்தி வந்த கடலூர் மாவட்டம் திர்ப்பபுலியூரை சேர்ந்த திருமலை என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றுக்கு இந்த தங்கம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 90 லட்சம் ரூபாய் இருக்கும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com