கோபிசெட்டிபாளையம்: உணவக உரிமையாளரை தாக்கியதாக 5 இளைஞர்கள் கைது

கோபிசெட்டிபாளையம்: உணவக உரிமையாளரை தாக்கியதாக 5 இளைஞர்கள் கைது
கோபிசெட்டிபாளையம்: உணவக உரிமையாளரை தாக்கியதாக 5 இளைஞர்கள் கைது

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூரில் உணவக உரிமையாளரை தாக்கியதாக 5 இளைஞர்கள் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

கோபிசெட்டிபாயைம் அருகே உள்ள நம்பியூர் செட்டியாம்பதியைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் நம்பியூர் பேருந்து நிலையத்தில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், வரதராஜனின் மனைவி சாந்தி கடையில் இருந்தபோது கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்த நவீன், சஞ்சய், அசாருதீன், பிரவீன்குமார், சங்கர் உள்ளிட்ட 6 பேரும், பண்ணாரி கோயிலுக்கு சென்று விட்டு குடிபோதையில் உணவகத்திற்குள் சென்று தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளனர்.

மதுபோதையில் இருந்ததாலும் கடையில் பலரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாலும் அவர்களை கடைக்கு வெளியே இருக்கக் கூறிய சாந்தி, தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து தந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சாந்தியை தரக்குறைவாக பேசி சரமாரியாக அடித்துள்ளனர். இதை தடுத்த சாந்தியின் கணவர் வரதராஜனையும் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினரை கண்டதும் ஒரு இளைஞர் தப்பியோடிய நிலையில், 5 பேர் பிடிபட்டனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்; அவர்களை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இதில் காயமடைந்த வரதராஜன், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com