பொள்ளாச்சி: தனியே சென்ற 10ம் வகுப்பு மாணவியிடம் ஆயுதத்தை வைத்து வன்கொடுமை முயற்சி

பொள்ளாச்சி: தனியே சென்ற 10ம் வகுப்பு மாணவியிடம் ஆயுதத்தை வைத்து வன்கொடுமை முயற்சி
பொள்ளாச்சி: தனியே சென்ற 10ம் வகுப்பு மாணவியிடம் ஆயுதத்தை வைத்து வன்கொடுமை முயற்சி

பொள்ளாச்சியில் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி நேற்று இரவு டியூசன் முடித்துவிட்டு, திரும்பி வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த நபர், மாணவியின் கழுத்தில் கூர்மையான கம்பியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

பின்னர் கொன்று விடுவதாக மிரட்டி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது, சுதாகரித்துக்கொண்ட மாணவி அந்த நபரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இது குறித்து மாணவி பெற்றோர்களிடம் கூறிய நிலையில், மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, அதில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு, அந்த நபரை அடையாளம் கண்டனர். பின்னர் அந்த நபர், சுற்றுப்பகுதியில் தள்ளுவண்டியில் மீன் வியாபாரம் செய்து வரும் சிவக்குமார் என்பது தெரியவந்தது.

பின்னர் அவரை கைதுசெய்த போலீசார், கொலை மிரட்டல் மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com