”காதல் பிரச்னையில்.. நண்பனின் அந்தரங்க உறுப்பை வெட்டி கொடூர கொலை.. “- பின்னணி என்ன?

”காதல் பிரச்னையில்.. நண்பனின் அந்தரங்க உறுப்பை வெட்டி கொடூர கொலை.. “- பின்னணி என்ன?
”காதல் பிரச்னையில்.. நண்பனின் அந்தரங்க உறுப்பை வெட்டி கொடூர கொலை.. “- பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில், நண்பனை கொலை செய்து, அவரின் அந்தரங்க உறுப்புகளை வெட்டி வாயில் போட்டுக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

21 வயதான சமீர்கானும் மற்றும் 29 வயதான அமீர் அன்சாரியும் சிறுவதிலிருந்தே நண்பர்கள். அமீர் அன்சாரி ஓட்டுநராக பணியாற்றுகிறார். சமீர்கான் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அன்சாரி ஒரு பெண்ணுடன் சில காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததுள்ளார். ஆனால் அந்த பொண்ணுடனான உறவு சில காலத்தில் முடிந்துவிட்டதாகவும், அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுக்கிறது. இருப்பினும், அப்பெண் எப்படியாவது சமாதானம் செய்து ஒருநாள் திருமணம் செய்யவேண்டும் என அன்சாரி எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்துள்ளார்.


ஆனால் இதற்கிடையில், அந்த பெண் நண்பன் சமீர் கானுடன் டேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார். சமீர்கானுக்கு ஏற்கெனவே ஒரு காதலி இருந்ததால் அமீர் அன்சாரி கோபமடைந்து, அப்பெண்ணுடனான உறவிலிருந்து நண்பன் சமீர்கானை விலக சொல்லி எச்சரித்துள்ளார். ஆனால் சமீர்கான் அப்பெண்ணை விட்டு விலகாததால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சமீர்கான் ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் சமீர் கானுடன், அமீர் அன்சாரியும் கலந்துகொண்டுள்ளார். அப்போது மதுபோதையில் அந்த பெண் குறித்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அன்சாரி, நண்பன் சமீர் கானை கத்தியால் 9 முறை குத்தி கொலை செய்துள்ளார். பிறகு சமீர் கானின் அந்தரங்க உறுப்புகளை வெட்டி அதனை அவரது வாயில் வைத்ததுள்ளார். பிறகு அமீர் அன்சாரிக்கு மதுபோதை தெளிந்து, சுய நினைவு வந்தவுடன், அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்’ என பிவாண்டி குற்றப்பிரிவு போலீஸார் கூறியுள்ளனர். இப்போது அமீர் அன்சாரி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.  இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம், உ.பி.யின் லக்கிம்பூர் கெரியில், 32 வயது நபர், தனது 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது, அவரது அந்தரங்க உறுப்பை வெட்டி கொலை செய்ததாக ஒரு தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்ததால், தனது மகளை வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு சென்றதாகவும், வீட்டிற்கு திரும்பிய போது 35 வயதான நபர், தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து இருந்ததாகவும், தனது மகளை காப்பாற்ற முயன்றபோது அந்த நபர் தன்னைத் தாக்கியதாகவும் அதனால் சமையலறையிலிருந்து ஒரு கத்தியைக் கொண்டு வந்து அந்தரங்க பாகங்களை வெட்டி அவனுக்கு பாடம் புகட்டியாதாகவும் அப்பெண் கூறியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com