”கோலி, ரோகித்தை திட்டியதால் என் நண்பனை கொலை செய்தேன்”.. இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

”கோலி, ரோகித்தை திட்டியதால் என் நண்பனை கொலை செய்தேன்”.. இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

”கோலி, ரோகித்தை திட்டியதால் என் நண்பனை கொலை செய்தேன்”.. இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை திட்டியதால் அரிவாளால் வெட்டி இளைஞரை கொலை செய்ததாக அவரது நண்பர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், இன்று காலை அக்கிராமத்திற்கு வெளியே உள்ள காட்டுப்பகுதியில் இறந்தநிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் விக்னேஷ் நேற்று காலை நண்பர்கள் பிரபாகரன் மற்றும் தர்மராஜ் ஆகியோருடன் மது அருந்த சென்றுள்ளார். பின்னர் விக்னேஷ் வீட்டிற்கு வந்தநிலையில் மாலை மீண்டும் மது அருந்த அவரது நண்பர்கள் பிரபாகரன், தர்மராஜ் அழைத்து சென்றுள்ளனர்.

ஊருக்கு வெளிப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 3 பேரும் மது அருந்திய போது தர்மராஜ் அரிவாளால் விக்னேஷின் தலையில் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து கேட்டபோது, கிரிக்கெட் வீரர்கள் கோலி மற்றும் ரோகித் சர்மாவை திட்டியதால் கொலை செய்தேன் என தர்மராஜ் காரணம் கூறியுள்ளார். இதனையடுத்து தர்மராஜ் கொலைக்கான காரணத்தை மறைப்பதாக நினைத்து அவரிடம் மேலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com