முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை வீடியோ வெளியிட்டு விமர்சித்ததாக ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஏற்கெனவே இரண்டுமுறை காவல்துறையினர்முன்பு கர்ணன் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.

முன்னாள் நீதிபதி கர்ணனை காவல்துறையினர் ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை என உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடி அருகே கர்ணனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com